ANDROID MOBILE

      SMS மூலமாக +2 தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்; PT [space] HSC [space] REGISTER NUMBERஐ டைப் செய்து 09840933357 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும்; உங்கள் மதிப்பெண்கள் SMS மூலம் அந்த எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்; www.puthiyathalaimurai.tv என்ற இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்      குடியரசுத் தலைவர் தேர்தல்: வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் முடிவு செய்யப்படும்; பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவிப்பு; ஆளும் ஐ.மு.கூ மற்றும் தே.ஜ.கூ நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம்      நெல்லை: டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட மேலும் 2 குழந்தைகள் பலி; அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 6 மாத குழந்தையும் 8 வயது சிறுமியும் பலி      ராமேஸ்வரம், ஆலப்புழாவில் மீன்பிடி படகு மீது கடற்படை கப்பல் மோதிய விவகாரம்; கடலோர காவல்படை கப்பல்கள் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை: பல்லம் ராஜு; இந்தியாவில் கடல் வழி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது: அமைச்சர் பல்லம் ராஜூ; பாதுகாப்பை பலப்படுத்தவே ராஜ் தரங் எனும் கப்பல் கடலோர காவல் படைக்கு ஒப்படைப்பு; கடலோர பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ராஜு      மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 3147 கனஅடி தண்ணீர் வரத்து; மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.34 அடி, நீர் இருப்பு 41.30 டி.எம்.சி.      நுங்கம்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய இலங்கை தூதரகம் பூட்டு போடும் போராட்டம்; தமிழ் தேசிய விடுதலை அமைப்பைச் சேர்ந்த தியாகு உள்ளிட்ட 26 பேர் கைது; இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என முழக்கமிட்டனர்      காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தை கூட்ட பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்; கர்நாடகம் கூடுதல் நீரை பயன்படுத்துவதை தடுக்க கோரிக்கை: முதல்வர் ஜெயலலிதா; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தால் குறுவை, சம்பா சாகுபடி பணிகள் பாதிக்கும்      தரம்சாலா: மாலை 4 மணிக்கு - கிங்ஸ் XI பஞ்சாப் - டெல்லி டேர்டெவில்ஸ் மோதல்; புனே: இரவு 8 மணிக்கு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - புனே வாரியர்ஸ் மோதல்      இலங்கை தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண சிறந்த திட்டத்தை உருவாக்க வேண்டும்; இலங்கை அரசிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டன் அறிவுறுத்தல்; தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு பணிகள் முன்னேற்றப்பாதையில் செல்கிறதா: ஹிலரி; அங்கிருந்து ராணுவத்தை திரும்ப பெறவும், மாகாணத் தேர்தலை நடத்தவும் வலியுறுத்தல்      தேர்தல் விதிமுறையை மீறியதாக தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் மீது வழக்குப் பதிவு; ஆதரவாளர்கள் 300 பேருடன் மனு தாக்கல் செய்ய வந்ததாகப் புகார்; வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தபோது தேர்தல் விதிமுறையை மீறியதால் நடவடிக்கை
இன்றைய முக்கிய செய்திகள்

ஐ.நா. அமைதிக்கான நிர்வாகக் குழுவில் இருந்து இலங்கை சார்பில் இடம்பெற்றிருந்த ஷவேந்திர சில்வா வெளியேற்றப்பட்டுள்ளார்.

23-02-2012 அன்று வெளியிட்டது

இதுதொடர்பாக அந்த குழுவின் தலைவர் Louise Frechette வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷவேந்திர சில்வாவின் பங்களிப்பு தங்கள் குழுவின் நோக்கத்துக்கு உதவிகரமாக இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், ஐ.நா.,வின் சிறப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர்களிடையே விவாதிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த முடிவுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத வரை, சர்வதேச அமைப்புகளில் இவ்வாறு இலங்கை ஒதுக்கப்படும் நிலையே ஏற்படும் என்றும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் கருத்து தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைதிக்கான நிர்வாகக் குழுவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷவேந்திர சில்வா, இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிப் போரின்போது, 58-வது படைப் பிரிவுக்கு தலைமை வகித்தவர். இந்த படை ஆயிரக்கணக்கான பொதுமக்களை சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு உள்ளது. ஐநா அமைதிக்கான நிர்வாக குழுவில் மொத்தம் 10 உறுப்பினர்கள் உள்ளனர். ஐ.நா. அமைதிப் பணிகளுக்காக படைகளை அனுப்பும் உறுப்பினர் நாடுகளுக்கு இந்த குழுதான், உரிய நிதியை நிர்ணயிக்கிறது.

வகைகள்: செய்திகள்


ஒரு பதில் விடவும்


Toggle between English and Tamil using Ctrl+g
தமிழில் தட்டச்சு செய்ய Ctrl+g விசையைப் பயன்படுத்தவும்